மாகாண சுகாதார பணிப்பாளரை வடக்கிலிருந்து நியமிக்குமாறு சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை…!

வடமாகாண சுகாதார பணிப்பாளர் நியமனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு மாகாணத்தில் தகுதியானவர்கள் இருக்கும் நிலையில் வெளி மாகாணங்களில் இருந்து நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே தகுதியான சுகாதார பணிப்பாளர் ஒருவரை வடக்கில் இருந்தே தெரிவு செய்யுமாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் வழங்கப்பட்ட நியமனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews