மின்வெட்டு நேரத்தில் மாற்றம்: வெளியாகியுள்ள அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

செப்டெம்பர் 03 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 1 மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மாலை நேரங்களிலே மின்வெட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 1 மணிநேரமாக மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recommended For You

About the Author: admin