தந்தையை இரும்பால் தாக்கி கொலை செய்த மகன்

கொழும்பு இரத்மலானை பிரதேசத்தில் மகன் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொலை செய்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான மகனுக்கும் தாய் மற்றும் தந்தையுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மகன் தந்தையை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். சம்பவத்தில் 70 வயதான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தாய் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த கடந்த இரண்டு வருடங்களாக சுயநினைவின்றி இருந்தவர் என தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக மகனை கல்கிஸ்சை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin