ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் பிணை!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், கொழும்பில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, கைதுசெய்யப்பட்ட 28 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ‘அடக்குமுறையை நிறுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில், பல்வேறு தொழிற்சங்கங்களும், சமுக அமைப்புகளும் பங்கேற்றிந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை நடத்தி இருந்தனர். இதன் போது, கைதுசெய்யப்பட்ட 28 பேரும், இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews