வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் பருத்தித்துறையில் கைது…!

பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் சற்று முன் பருத்தித்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலீஸ் பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் மகிந்த சமரசிங்க தலமையிலான குழுவினர் அவர்களை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்ட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் கைது செய்யப்பட்டுள்ளவர்களை பருத்தித்துறை பொலிசாரால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் பருத்தித்துறை பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin