மானிப்பாயில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

மானிப்பாய்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் இன்று அதிகாலையளவில்  நடத்தப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த கும்பலொன்று வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, அங்கு நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளது.

தீ வைத்த மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin