அரசாங்க தொழிலை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அரச துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் வாய்ப்பு இலங்கையில், ஆசிரியர் துறையில்வேலைவாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் நபர்களுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நேரத்தில் தொழிவாய்ப்பு தேடி காத்திருக்கும் இலங்கையர்களுக்கு  ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

வடமத்திய மாகாணசபை பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி உள்ளடங்களாக மொத்தம் 1993 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி ஆகும்.

Recommended For You

About the Author: admin