மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

இன்றைய தினம் (23) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A B C D E F G H I J K L P Q R S T U V W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களும் , இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 மணி வரை, இரண்டரை மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், M N O X Y Z ஆகிய வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Recommended For You

About the Author: admin