அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளில் ஏற்றிச் சென்ற வாகன சாரதி கைது.

தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி நான்கு மாடுகளை ஏற்றி சென்ற சாரதியை கைது செய்ததுடன் ஏற்றிச் சென்ற சிறியரக லொறி ஒன்றையும்,  நான்கு மாடுகளையும்  தருமபுர போலீசாரால்  18.08.2022 நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர்.
இரவு வேளை கால்ந டைகளை  கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் இன்மை மற்றும் கால்நடைகளை ஏற்றி செல்வதற்கு  வாகனத்தில்”போதிய வசதிகள் இன்மை, மற்றும்  தண்ணீர், உணவு, காற்றேட்ட வசதுகள் என்பன ஏற்படுத்திக் கொடுக்காத  காரணத்தினாலேயே வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வாகன சாரதியை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
குறித்த நபரை எதிர்வரும் 25 .08.2022 அன்று  நீதிமன்றில் முற்படுத்த தர்மபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மாடுகளை பராமரிப்பதையும் தருமபுரம் போலீசார் மேற்கொண்டு வருவதாக தருமபுரம்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி   D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin