யாழ்.தேவி புகைரதத்தில் மதுபோதையில் ஏறியவர்கள் அட்டகாசம்! ரயில் கண்ணாடி சேதம், 4 பேர் கைது.. |

நிறை மதுபோதையில் யாழ்.தேவி புகைரதத்தில் ஏறிய 4 பேர் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டைக்குச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மாலை 4.10 மணியளவில் மஹவ நிலையத்திலிருந்து ரயில் பயணிக்க தொடங்கியபோது ரயிலுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ரயிலை அவசரமாக நிறுத்துவதற்கு பயன்படுத்தும் சங்கிலியை இழுத்து பொதுமக்கள் ரயிலை நிறுத்தியுள்ளர்.

அதிகளவு பயணிகளால் நிரம்பியிருந்த ரயிலில் மதுபோதையில் ஏறியவர்கள் பயணிகளிடம் இருக்கைகளை கோரியதால் மோதல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் ரயில் பெட்டியில் இருந்த பயணிகளுடன் கைகலப்பு ஏற்பட்டதாகவும் பயணிகள் கூறுகின்றனர். இதன்போது வன்முறையில் ஈடுபட்டோர் ரயிலில் இருந்து இறங்கி ரயில் பெட்டியை கட்டையால் தாக்கியதில் கண்காடிகள் சேதமடைந்துள்ளன.

உடனடியாக செயற்பட்ட புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரையும் பிடித்து அனுராதபுரம் ரயில்வே உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் ஆர்.எம்.பி.ஏ. ரத்னமலலா  மற்றும் அனுர பிரேமரத்ன ஆகியோரின் ஒப்படைத்ததுடன், பின்னர் மஹவ தலைமைய பொலிஸாரிடம் குறித்த நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews