ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயம்! 19 வயது இளைஞன் பரிதாப பலி… |

சட்டவிரோதமான மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயதில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் பொகுந்தர என்ற இடத்தில் நேற்றய தினம் மாலை இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் பாவனையில் உள்ள வீதியில் நடத்தப்பட்ட இந்த போட்டியின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிலியந்தலை பொகுந்தர ஐ.சி.சி வீதியில் நேற்று மோட்டார் சைக்கிள் போட்டி நடைபெற்றது.

உயிரிழந்தவர் பிலியந்தலை பெல்வத்தை கோரகபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews