கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் : நளின் பண்டார

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஒன்றை நடத்துவதைக் காட்டிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அதிகளவான சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளது. தேர்தல் ஒன்று நடந்தால், ஊதியத்தைப் பெறாது கடமையாற்றுவதாக, அரச ஊழியர்கள் அறிவித்துள்ளனர். சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து, தேர்தலுக்கான நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews