கொழும்பு வரும் கச்சா எண்ணெய் கப்பல்

100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் ஒன்று இன்று இரவு கொழும்பை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
120,000 மெட்ரிக் தொன்கள் கொண்ட 2வது கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் ஒகஸ்ட் 23-29 திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுத்திகரிப்பு நிலையம் அடுத்த வார நடுப்பகுதியில் செயற்படத் தொடங்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews