தெல்லிப்பழையில் திருடப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் திருடப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க, நீர் இறைக்கும் இயந்திரங்கள் தெல்லிப்பழை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட 07 நீர் இறைக்கும் மோட்டார்கள் மற்றும் இரண்டு நீர் பம்பிகளே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டுவன் பகுதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக, நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருடப்பட்டமையால், விவசாயிகள் சிரமங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews