பொல்லால் தாக்கப்பட்டு வயோதிபர் படுகொலை!.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வத்தளை, ஹூனுப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய வயோதிபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews