கோவிட் தடுப்பூசி தொடர்பில் வடமாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை.

வடக்கு மாகாணத்தில் கோவிட் தடுப்பூசிகளை வழங்கும் போது வாராந்த தரவுகளை தனக்கு அனுப்புமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது கோவிட் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் தமது பிரிவுகளில் உள்ள சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களுக்கு அமையப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கில் கட்டணம் செலுத்தப்படும் சுகாதாரத்துறை சார்ந்த சமூக பராமரிப்பாளர்களை மாகாண கூட்டுறவின் கீழ் இணைத்து அவர்களுக்கான NVQ பயிற்சிகளை வழங்கி சேவையில் ஈடுபடுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews