வவுனியாவில் கியூஆர் முறைமை வெற்றி : எரிபொருளுக்கான வரிசைகள் குறைந்தது!

வவுனியாவில் கியூஆர் முறைமை மூலமான எரிபொருள் விநியோகம் வெற்றியடைந்துள்ளதுடன், இதனால் வரிசைகள் குறைந்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிந்துள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருகின்ற நிலையில்,  அரசினால் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து குறித்த முறைமை நாடாளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், வவுனியாவிலும் அமுலுக்கு வந்தது.
இதனையடுத்து வவுனியாவின் 16 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்த முறைமை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து எரிபொருள் வரிசைகளில் பாரிய மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது.
குறிப்பாக மாவட்டத்தின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கில் வரிசைகளே இல்லாமல் மக்கள் பெற்றோல் நிரப்புவதை அவதானிக்க முடிந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews