அத்தியாவசிய ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கும் பணி இரண்டாம் நாளாக முன்னெடுப்பு.

அத்தியாவசிய ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கும் பணி இரண்டாம் நாளாக நேற்று 01.08 முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த விநியோக நடவடிக்கை நேற்று  முன்தினம் ஆரம்பமானது.

இதேவேளை, நேற்றையதினம் (01.08.2022) குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில், விவசாயம் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பணியாளர்கள், சுகாதார துறையினர்,   இலங்கை போக்குவரத்துச்சபை மற்றும் ஊடகவியலாளர்கள், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்களிற்கும்,

மற்றும் ஏனைய திணைக்களங்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் பணியாளர்களிற்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews