யாழில் தொலைபேசி திருடிய மூவர் கைது 40க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் மீட்பு…….!

யார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் சந்தேக நபர்கள் மூவரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது  யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட கைத் தொலைபேசிகள் தொடர்பில் பொலிஸ்  நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முறைப்பட்டின் அடிப்படையில் பொலிசார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் நாவற்குழி மற்றும்  குருநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 40 மேற்பட்ட தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews