கடலுக்கு குளிக்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு

கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இவரை நீண்ட நேரமாகியும் காணாத நிலையில் காலை 8.30 மணியளவில் சடலமாக கரையொதுங்கினார்.

அப்பகுதியை சேர்ந்த மனுவேல் செபஸ்டியன் என்கிற வயது 65 வயதான முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews