காலிமுகத்திடல் தாக்குதல்! பொறுப்பான அதிகாரிகள் பதவி விலக வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை.

காலி முகத்திடலில் போராட்டத் தளம் மீது காவல்துறையினரும் இராணுவத்தினரும் நடத்திய தாக்குதல்களை எம்னஸ்டி இன்டர்நெசனல் என்ற சர்வதேச மன்னிப்பு சபை கண்டித்துள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பான இலங்கையின் அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும்.

அத்துடன் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை பாதுகாக்கப்படுவதுடன்,இத்தகைய வன்முறை செயல்களை இலங்கை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். ‘கோட்டா கோ கம’விற்கு செல்ல ஊடகவியலாளர்களுக்கும் அதிகாரிகளளுக்கும் தடை விதிக்க கூடாது.

அதேவேளை ஊடக சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை அதிகாரிகளிடம் கோரியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews