134 வாக்குகளால் ஜனாதிபதியாக ரணில் தெரிவு, சபாநாயகர் அறிவிப்பு…..!

இன்றைய தினம் புதிய ஜநாதிபதி தெரிவு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தலமையில் இடம் பெற்றது. அதற்கமைய,  புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்களிப்பின் அடிப்படையில் முதற் கட்டமாக செல்லுபடியான மற்றும் செல்லுபடியாகாத வாக்குககள் எண்ணெப்பட்டன.

இவ்வாக்கெடுப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அகில் இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர்  வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

காலை சபாநாயகர் தலமையிலவ கூடிய பாராளுமன்றில் சபாநாயகர் உள்ளிட்ட 223  பேரும் இன்றையதினம் பாராளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்தனர், இதில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு  -134 வாக்குகளும்
டலஸ் அழகபெருமவுக்கு 82 வாக்குகளும்
அனுரகுமர திசநாயக்கவிற்க்கு – 03 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews