கட்டுநாயக்க விமான நிலையம் முன்பாக பதற்றமான சூழல்.

கட்டுநாயக்கவில் பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை சுற்றி தற்போது கடும் பதற்றமான சூழல் நிலவுவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது அங்கு ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலைய பகுதிக்கு சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அரச தலைவர் மற்றும் அவரது குழுவினரை விமான நிலையத்தின் ஊடாக செல்ல இடமளிக்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு வாகனமும் ஆர்ப்பாட்டக்காரர்களால் பரிசோதிக்கப்படுவதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews