கரைச்சி பிரதேச சபையின் சுகாதார சிற்றூழியர்கள் நேற்று போராட்டம்

கரைச்சி பிரதேச சபையின் சுகாதார சிற்றூழியர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம்   நேற்று காலை 10.30 மணியளவில் பிரதேச சபை முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது.

தமது சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட நிலையல், தாம் கடமைக்கு செல்வதற்கு பெற்றோல் பெற்றுத்தருமாறு கூறியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளிக்க சென்றனர். இந்த நிலையில் குறித்த போராட்டக்காரருடன் மேலதிக அரசாங்க அதிபர் எஸ் சிறிமோகன் கலந்துரையாடினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews