ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!

இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக, ரஷ்ய எரிபொருள் நிறுவனங்களின் இரண்டு பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

இன்று முற்பகல் 9 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
நாட்டை வந்தடைந்துள்ள ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவரும், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசி மூலம் இலங்கைக்கான எரிபொருள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews