வாகனங்களில் இருந்து எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்கள் திருடிய கும்பலின் ஆட்டோவை கட்டி தொங்கவிட்ட பொதுமக்கள்..!

கொழும்பு – ராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் வாகன  உதிரி பாகங்கள் மற்றும் எரிபொருள் திருடிய திருடர்களை மடக்கி பிடித்த பொதுமக்களின் அவர்களுடைய ஆட்டோவை மின் கம்பத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.

காட்சிக்காகவே முச்சக்கரவண்டி மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மக்களின் வாகனப் பாகங்கள் மற்றும் எரிபொருளைத் திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட குறித்த முச்சக்கர வண்டியே, மக்களால் பறிமுதல் செய்யப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews