உரும்பிராயில் இளைஞன் உயிரிழப்பு.. போதை ஊசி ஏற்றப்பட்டாரா?

உரும்பிராய் பகுதியில் உள்ள வீடென்றில்  இணுவிலைச் சேர்ந்த இளைஞன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை  மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த இளைஞன் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்று க்கு அடிக்கடி சென்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மரணம் தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கும் போது குறித்த நபர் போதைவஸ்துப் பழக்கத்திற்கு அடிமையாகியவர் என அறியக் கிடைக்கும் நிலையில் அளவுக்கு அதிகமாக போதை ஊசி ஏற்றிய நிலையில் உயிர் இழந்தாரா?   என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.
எனினும் குறித்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews