யாழ்.நகரில் குளிர்பான விற்பனை நிலையத்தில் தீ பரவல்!

யாழ்.நகரிலுள்ள குளிர்பான விற்பனை நிலையம் ஒன்று நேற்றிரவு தீடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் பொதுமக்கள், வர்த்தகர்கள் இணைந்து தீயை அணைத்திருக்கின்றனா.

மின்சாரத் தடை நேரத்தில் அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மேல் தட்டில் வைத்து மின் பிறப்பாக்கி இயக்ப்பட்டுள்ளது. இதன்போது அதிலிருந்து ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

தீ பரவலையடுத்து அங்கே கூடியவர்கள், அருகில் உள்ள வர்த்தகர்கள் இணைந்து உடனடியாக தீயை அணைத்தமையினால் பாரிய சேதம. தவிர்க்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews