பாடசாலை மாணவர்கள் நீண்ட நேர காத்திருப்பின் பின் வீடு திரும்பினர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பாடசாலைகளிற்கு வருகை தந்த மாணவர்கள்  இன்றைய தினம் நீண்ட நேரம் காத்திருப்பின் பின் வீடு திரும்பியுள்ளனர்.
இன்று (20) பாடசாலை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், க.பொ.த (சா/த) பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களான பாடசாலைகளின் அதிபர்கள் கடமைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு, இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை ஆரம்பமாகின்றது.
இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்த நிலையில் இன்று (20)அதிகளவான மாணவர்கள் தூர இடங்களில் இருந்து வந்திருந்த மாணவர்கள் மற்றும் எரிபொருள் தட்டுபாட்டுக்கு மத்தியிலும் பிள்ளைகளை ஏற்றி வந்த பெற்றோர்கள் ஆத்திரமடையும் வகையில் நீண்ட நேர காத்திருப்பின் பின் வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு தெளிவற்ற முடிவை அறிவித்த கல்வி அமைச்சு பிள்ளைகளின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வார்கள் எனவும் தெளிவான முடிவை முதல் நாள் தெரியப்படுத்துமாறு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews