நாடளாவிய ரீதியில் போதைப் பொருட்களுடன் எழுவர் கைது.

நாடளாவிய ரீதியில் பொலிஸார் நேற்று (30) மேற்கொண்ட போதைப் பொருள் சுற்றிவளைப்புகளின்போது போதைப் பொருட்களுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக கொழும்பு மாளிகாந்த பிரதேசத்தில், 21 கிராம் 390 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 34 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அம்பாறை, நீர்கொழும்பு பேலியாகொட ஆகிய பிரதேசங்களில் 30 கிராம் ஹெரோய்னுடன் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, எராகம, வெல்லவீதிய, அங்குலான, தமுலுகொட்டுவ, களனிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 34, 38, 61, 49, 34 மற்றும் 33 வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews