சாவகச்சோி வைத்தியசாலையின் தனியான விபத்து சிகிச்சை பிரிவு மே மாதம் திறக்கப்படுகிறது..!

யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விபத்து சிகிச்சை பிரிவு மே மாதம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவுத்துள்ளார்.

சாவகச்சோி வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே பணிப்பாளர் மேற்படி விடயத்தை தொிவித்துள்ளார். சத்திர சிகிச்சை பிரிவுக்கான ஆளணி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு ஜீன் மாதம் முழுமையாக சிகிச்சை பிரிவு இயங்கும்.

அதுவரை வைத்தியசாலையில் உள்ள வளங்களையே பயன்படுத்த வேண்டியிருக்கும் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். மத்திய அரசாங்கத்தின் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த விபத்து சிகிச்சை பிரிவுக்கான 3 மாடி கட்டிட நிர்மான பணிகள் இடம்பெற்று, தற்போது இரு மாடிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews