திக்கம் பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்த்தர் மீது கோடாரி கொத்து..!

வடமராட்சி நெல்லியடி  திக்கம் பகுதியில் குடும்பஸ்த்தர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கோடாரியால் கொத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர்.

சம்பவத்தில் திக்கம் பகுதியை சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தர் மீதே கோடரியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று(23) காலை நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews