கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

நீதிமன்ற பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் பிளேட்டினால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டதாக கூறி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பொம்மைவெளி பகுதியை சேர்ந்த இளைஞனே கழுத்தில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளது. பிடியாணை உத்தரவை நிறைவேற்றும் முகமாக யாழ்ப்பாண பொலிஸாரினால் இளைஞன் கைது செய்யப்பட்டு,

பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த இளைஞன் தனது உடமையில் இருந்த பிளேட்டினை எடுத்து, தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார்.

என கூறி பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews