வவுனியாவில் வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியம்.

வவுனியா – புளியங்குளம் பகுதியில் வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் யானை ஒன்று வீதிக்கு வந்ததனால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்த பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் எனப் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, அவ்வப்போது குறித்த வீதிக்கு யானை வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews