ரம்புக்கனை போராட்டம்: ஒருவர் பலி, காயமடைந்தோர் 24ஆக உயர்வு!

கேகாலை மாவட்டம் ரம்புக்கனை போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 பொலிஸாரும் உள்ளடங்குவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

இதனிடையே, காயமடைந்தவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கேகாலை போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவித்தன.

நேற்று அதிகாலை முதல் ரம்புக்கனையில் வீதி, ரயில் மறியல் போராட்டங்கள் தொடர்ந்தன. 15 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்த போராட்டத்தை கலைக்க கண்ணீர் குகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். இதைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் நிலை வலுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews