சிகரெட் இல்லை.. என கூறியதற்காக கடைக்காரரை குத்திக் கொலை செய்த கும்பல்..!

சிகரெட் வாங்குவதில் உருவான வாய்த்தர்க்கம் மோதலில் முடிந்த நிலையில் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவத்தில் மாதம்பை – மஹகம பகுதியில் உள்ள கடை உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

நான்கு பேர் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது சிகரெட் இல்லை என கடையின் உரிமையாளர் கூறியதையடுத்து

இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்குவாதம் முற்றி கடை உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த வர்த்தகர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரும் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews