அரசுக்கு எதிரான போராட்டங்களில் வடகிழக்கு தமிழ் மக்கள் பகேற்கவேண்டும் என எதிர்பார்க்கும் போராட்டக்காரர்கள்..!

நாட்டில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல், யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புகூறி ஜனாதிபதி பதவி விலகவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.ஏமந்திரன் கூறியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ராஜபக்ஷ இருட்டு அகன்று போக வேண்டும்.

இன மத மொழி வேறுபாடின்றி ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் கோருகின்றனர். அந்தவகையில் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்குகிறோம்.

போராட்டத்தில் அரசியல் கலப்பு வேண்டாமென போராட்டாரர்கள் விரும்புகிறார்கள். வடக்கு கிழக்கில் பலர் கலந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றனர்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான குற்றப்பிரேரணை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைக்கு எதிரான சட்டத்திருத்தம் நிறைவேறினால் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும். எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews