நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒப்பம்!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ. கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

கொழும்பில் உள்ள எதிர்கட்சி அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை சென்ற இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கையொப்பங்களை இட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அரசாங்கததிற்கு எதிராக நாட்டின் பிரதான எதிர்கட்சியாகிய ஐக்கிய மக்கள் சக்தியால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews