சாரதி துாங்கியதால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து! யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.. |

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெற்று பியர் போத்தல்களுடன் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனமே விபத்திற்குள்ளானது.

சாரதி உறங்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்தில் காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த லொறி உதவியாளரின் சடலம் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த லொறி கொழும்பு பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றுக்கு சொந்தமானது எனவும் சாரதி மற்றும் உதவியாளர்  யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews