![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/04/Parliment-1-2-696x464-1.jpg)
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கவனத்தில் கொண்டு, பாராளுமன்றத்தில் உணவு மற்றும் காகிதாகிகளைப் பயன்படுத்துவதை கூடியவரை மட்டுப்படுத்துமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, பாராளுமன்றத்தில் நாளாந்தம் தயாரிக்கப்படும் உணவ வகைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தகவல் பரிமாற்றத்துக்காக காகிதாகிகளை பயன்படுத்தாமல் மின்னஞ்சலைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.