அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி விரட்டியடித்த மக்கள்…!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சிலாபம் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும் வேறு சிலருக்கு இடையில் ஏற்படவிருந்த மோதலை பொலிஸாரும், இராணுவத்தினரும் தலையிட்டு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சனத் நிஷாந்த உட்பட ஆளும் கட்சிக்கு ஆதரவாளர்கள் சிலாபம் நகரில் இருந்து புத்தளம் நகரை நோக்கி பேரணியாக சென்ற போது, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதி கோட்டாபயவை ராஜினாமா செய்ய கோரும் எதிர்ப்பு போராட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையில் மோதலான நிலைமை உருவானது.

பொதுஜன பெரமுனவின் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் சிலாபம் நகரில் பதற்றமான நிலைமை காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews