வட்டுக்கோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் அரசுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!

வட்டுக்கோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியால் அரசுக்கு எதிரான போராட்டம்!

இன்று, அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று வட்டுக்கோட்டை – வழக்கம்பரை பகுதியில் இடம்பெற்றது. இப் போராட்டமானது வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கம்பரை அம்மன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பித்த இப் போராட்டமானது பேரணியாக சென்று சங்கானை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் நிறைவுற்றது.

பதாதைகளை ஏந்தியவாறு அரசினை பதவி விலகுமாறு கோரி, அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews