மட்டக்களப்பில் இயற்கை முறை விவசாயத்திற்கான செய்முறை பயிற்சி.

இயற்கை முறை விவசாயத்திற்கான சேதனை பசளை உற்பத்தி , இயற்கை பீடைநாசினிகள் தயாரிப்பு மற்றும் பாவனை தொடர்பான செய்முறை பயிற்சி மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய போதனாசிரியர் பிரிவில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய போதனாசிரியர் பிரிவில் போதனாசிரியர் தெய்வமனோகரி ரமேசன் தலைமையில் இயற்கை முறையிலான விவசாய சேதனை பசளை உற்பத்தி மற்றும் இயற்கை பீடைநாசினிகள் தயாரிப்பு மற்றும் பாவனை தொடர்பான செய்முறை பயிற்சி இன்று முன்னெடுக்கப்பட்டது

சத்துருக்கொண்டான் கும்பிளாமடு பகுதி விவசாயின் வீட்டுத்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சேதன பசளை உற்பத்தி மற்றும் இயற்கை பீடைநாசினிகள் தயாரிப்பு மற்றும் பாவனை தொடர்பான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வி .பேரின்பராஜா , வலயம் மத்தி உதவி விவசாய பணிப்பாளர் என் . கணேசமூர்த்தி ,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறிதரன் , பாடவிதான உத்தியோகத்தர்கள் , பல்கலைக்கழக மாணவ பயிலுனர்கள் , சத்துருக்கொண்டான் கும்பிளாமடு விவசாய போதனாசிரியர் பிரிவில் தெரிவு செய்யப்பட பயனாளிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது கூட்டெரு தயாரித்தல் , இயற்கை முறை பூச்சி விரட்டிகள் தயாரிப்பு பசளை தயாரித்தல் ,பழமரங்களை கத்தரித்து சேதனப்பசளை இடல் , கருகிய உமிபாவனை , கிளிசிட்டியா நடுகை முறை , போன்ற செய்முறை விளக்க பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews