எழுவைதீவில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி தோல்வி!

எழுவைதீவில் மக்கள் எழுச்சி ! தாக்குதல் நடைபெறலாம் எனும் அச்சத்தில் நில அளவை திணைக்களத்தினர் தமது பணியை இடைநிறுத்தினர்.

இன்றைய தினம் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எழுவைதீவு கிராமத்தில் இறங்குதுறை பகுதியில் அமைந்துள்ள பெண்ணொருவருக்கு சொந்தமான 53 பேர்ச்சஸ் காணியை சிறிலங்கா கடற்படையினருக்கு சொந்தமாக்குவதற்காக நில அளவை திணைக்களத்தினர் மேற்கொண்ட முயற்சியினை எழுவைதீவு மக்கள் ஒன்றிணைந்த போதிலும்

இன்று காலை ஒன்பது மணியளவில் மேற்படி காணியை அளவீடு செய்து சுவீகரிப்பதற்காக நில அளவை திணைக்களம் தீர்மானித்திருந்தது. ஆனாலும் இதனை தடுப்பதற்காக எழுவைதீவில் பொதுமக்கள்பெருமளவில் குழுமியிருந்ததால் காணியை அளவீடு செய்யும் திட்டத்தினை கைவிடுவதாக நில அளவை திணைக்களத்தினர் தீர்மானித்து இடைநடுவில் திரும்பிச்சென்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews