ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் யாழில் நாளை மாபெரும் கண்டனப்பேரணி!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் மாபெரும் கண்டனப்பேரணி இடம்பெறவுள்ளது.

கோட்டபாய அரசின் காட்டுமிராண்டித் தனமான ஆட்சியைக் கண்டித்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மின்சாரம், பெற்றோல், டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் தட்டுப்பாட்டினைக் மற்றும் விலை உயர்வினைக் கண்டித்து 07.04.2022 வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தொல்புரம் வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் முன்னிலையில் இன,மத, கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று கூடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அழைப்பு விடுத்துள்ளார் .

Recommended For You

About the Author: Editor Elukainews