மாதிபொல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை.

கலேவெல-மாதிபொல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் மாதிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மாதிபொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews