இந்திய அரசினால் மீனவருக்கென வழங்கப்பட்ட உணவு பொதி மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை! சம்மேளனம் குற்றஞ்சாட்டு.

யாழில் இந்திய அரசாங்கத்தினால் மீனவர்களுக்கென வழங்கப்பட்ட உணவு பொதிகள் உரிய வகையில் பகிர்ந்தளிக்கப்படாமையினால் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை என மீனவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர் யாழ் மாவட்ட  கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தினரிடம்   இந்திய உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட மை தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்தனர்

 கடந்த வாரம் இந்திய அரசினால் யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கென தலா 5 ஆயிரம்  பெறுமதியான 600 உலர் உணவு பொதிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் பங்குபற்றுதலுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து இந்திய அரசின் உலர் உணவு பொதி கையளிக்கப்பட்டது

எனினும் இந்திய அரசினால் வழங்கப்பட்ட உணவு பொதிகள் மீனவ சமூகத்தினருக்கு கிடைக்கவில்லை அந்த உதவிகள் மீனவர் அல்லாதோர்  பலருக்கு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளதோடு
யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பல மீனவர் சங்கங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் குழப்ப நிலை காணப்படுவதாகவும் தெரிவித்து ள்ளனர்
யாழ்ப்பாணத்தில் செயற்படும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் கட்சி அங்கத்தவர்களுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்குமே இந்திய அரசின் உலர் உணவு பொதி வழங்கப்பட்டதாக தாங்கள் கேள்விப்பட்டதாகவும் தெரிவித்தனர்
யாழ்ப்பாணத்தில்  அரசுக்கு சார்பாக செயற்படும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் வைத்து  யாழ் இந்திய துணைத்தூதுவரின்  பங்கேற்புடன் கட்சி ஆதரவாளர்களுக்கு இந்திய அரசின்  உலர்  உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமைக்குதங்களிடம் ஆதாரங்கள் உள்ளதெனவும் தெரிவித்தனர்

இதேவேளை சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உணவுப் பொதியானது கடற்றொழிலாளர் சங்க சமாசத்தினரால் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டு சகல மீனவ குடும்பத்திற்கும் குறித்த உதவிகள் சென்று அடைந்ததாகவும் எனினும் அண்மையில்   இந்திய அரசினால் வழங்கப்பட்ட உணவு பொதி தொடர்பில் மீனவர் சங்க சமாசங்களோடு   கலந்துரையாடாது தனிப்பட்ட ரீதியில் தன்னிச்சையாக பெயர்  விவரங்கள் சேகரிக்கப்பட்டு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் மீனவர் குடும்பங்களுக்கு குறித்த உதவிகள் கிடைக்காதமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews