இறுதி கிரிகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தாக்கிய மின்னல்! சிறுவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்.. |

மயானத்தில் இறுதி கிரிகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உட்பட 25 பெர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் மாவனெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. மரணமடைந்த நபருக்கான இறுதிக் கிரியை சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மாவனெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews