கிளி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மீளாய்வு  கூட்டம்…..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (10-03-2022) மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மீளாய்வு  கூட்டம் நடைபெற்றுள்ளது
 கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்
இன்றைய (10-03-2022) தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மீளாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்பன.
இன்று பகல் 11 மணிக்கு நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ,பிரதேச செயலகங்களின்   பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin