கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்த் தேசிய மகளீர் தின நிகழ்வு………!

தமிழ்த் தேசிய மகளீர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளீர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளீஸ் அணி தலைவிகௌசலா ஜெயக்காந்தராசா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கொழும்மில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராத்தின் அரசியல் ஆலோசகர் பானு பிரகாஸ் முதன்மை அதிதியாக கலந்து கொண்டதுடன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மா வை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர். எஸ் சிறிதரன், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாவட்டத்தில் சிறந்த தலைமைத்துவம் மற்றம் பெண் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin